மரம் விழுந்து கார் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வளாகத்தில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளி அலுவலகம் அருகே ஒருவர் தனது காரை நிறுத்தியுள்ளார். அப்போது பலத்த காற்று வீசியுள்ளது. இதனால் அருகில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து காரின் மீது விழுந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி காரை அங்கிருந்து அகற்றியுள்ளனர்.இதில் கார் முழுவதும் சேதம் அடைந்துள்ளது.