Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஆகஸ்ட் 3) இங்கெல்லாம் மின்தடை….. எந்தெந்த பகுதிகள்…? முழு லிஸ்ட் இதோ….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக  இன்று(ஆகஸ்ட் 3) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தேனி மாவட்டம்:

கம்பம் மின்வாரியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இன்று(ஆகஸ்ட் 3) மின்தடை செய்யப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம்:

காரைக்குடி அருகே கானாடுகாத்தான் துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை (ஆக. 4) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அன்று காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும் ஸ்ரீ ராம்நகா், கோட்டையூா், வேலங்குடி, பள்ளத்தூா், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகபட்டி, ஆவுடைபொய்கை, ஓ. சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என, செயற்பொறியாளா் எம். லதாதேவி தெரிவித்துள்ளாா்.

Categories

Tech |