இஸ்ரேலின் கில்போ சிறைச்சாலையில் இஸ்ரேலியர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் பாலஸ்தீனிய நாட்டு குற்றவாளிகள் பலர் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு பெண் பாதுகாவலர்களை சிறைக்கைதிகளுக்கு பாலியல் விருந்தாக்கியதாக சிறை கண்காணிப்பாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த வாரம் இங்கு பாதுகாவலராக பணியாற்றிய பெண் ஒருவர், பாலஸ்தீனிய சிறைக்கைதிக்கு தான் செக்ஸ் அடிமையாக சிறை கண்காணிப்பாளர்களால் ஒப்படைக்கப்பட்டதாகவும், தனக்கு இதில் துளியும் விருப்பம் இல்லை.
ஆனாலும் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியாது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்ககப்படும் என்றும் ஒரு பாதுகாப்பு வீராங்கனை பயங்கரவாதியால் பலாத்காரம் செய்யபப்பட்டு உள்ளார் என்பதை சகித்துக்கொள்ள முடியாது எனவும் பிரதமர் யாயர் லபிட் தெரிவித்துள்ளார்.