தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் தனிமையில் இருந்த பாலமுருகன் மகள் வீட்டிற்கு அவ்வப்போது சென்று வந்துள்ளார். இருந்த போதும் மனைவியின் பிரிவால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த பாலமுருகன் தற்கொலை செய்ய எண்ணி விஷம் குடித்து மயங்கி உள்ளார்.
இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி பாலமுருகன் இறந்துவிட்டார். இதுதொடர்பாக ஓடைப்பட்டி காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.