Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நகர்ப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை”….. வேறு இடத்திற்கு மாற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்…!!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கே.வி.ஆர் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.ஆர் நகரில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இங்கு குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் மெயின் ரோட்டில் டாஸ்மாக் அமைந்திருப்பதால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கின்றது. இதனால் இக்கடையை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் நேற்று 42 வது வார்டு கவுன்சிலர் தலைமையில் அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. மேலும் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோஷம் எழுப்பினார்கள். இதை தொடர்ந்து உதவி கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. இதை அடுத்து டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் கூறினார்கள்.

Categories

Tech |