Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடப்பாவமே….! விஷப்பூச்சி கடித்த 3 வயது குழந்தை…. பெற்றோரின் கவனக்குறைவால் நேர்ந்த சோகம்….!!!!

வடமதுரை அருகே விஷப்பூச்சி கடித்த 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே பிச்சையம்பட்டி பகுதியை சேர்ந்த மரம் வெட்டும் கூலி தொழிலாளர் பால்காளை, தினமும் கோவிலூர் அருகே கூலி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்புவார். இவருக்கு மூன்று வயதில் காவிய தர்ஷினி என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் குழந்தை தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது கண்ணுக்கு தெரியாத பூச்சி கடித்துள்ளது.

பின்னர் வீட்டின் அருகிலேயே இந்த குழந்தைக்கு பெற்றோர்கள் மருத்துவம் பார்த்துள்ளனர். நேற்று முன்தினம் குழந்தை மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 3 வயது குழந்தை பூச்சி கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |