Categories
விளையாட்டு

“காமன்வெல்த் போட்டி”… தங்கம் வென்ற இந்திய வீரர்…. வாழ்த்து சொன்ன தலைவர்கள்….!!!!

காமன் வெல்த் போட்டி பளுதூக்குதலில் இந்திய வீரர் அச்சிந்தா ஷூலி தங்கம் வென்றார். ஆண்களுக்கான 73 கிலோ எடைப் பிரிவில் 313 கிலோ எடையை தூக்கிய அவர், இந்தியாவுக்கு 3வது தங்கப்பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார். இந்த நிலையில் அச்சிந்தா ஷூலி இந்தியாவை பெருமைப்படுத்தி இருக்கிறார் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று மூவர்ணக் கொடியை உயரப் பறக்கவைத்தார்.

ஒரே முயற்சியில் முதலிடத்தை பிடித்த நீங்கள்தான் வரலாறு படைத்த சாம்பியன் எனவும் கூறியுள்ளார். இதேபோன்று பிரதமர்மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், காமன்வெல்த் விளையாட்டுகளில் திறமை மிகுந்த அச்சிந்தா தங்கப் பதக்கம் வென்று இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அமைதியான இயல்பு மற்றும் மன உறுதிக்கு அவர் பெயர் பெற்றவர். தன் சிறப்பு சாதனைக்காக அவர் மிகவும் கடுமையாக உழைத்தார். அவருடைய எதிர் காலம் முயற்சிகளுக்காக என் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

அத்துடன் காமன்வெல்த் விளையாட்டுகளுக்காக நம் அணி இங்கிலாந்து புறப்படுவதற்கு முன் அச்சிந்தாவுடன் நான் கலந்துரையாடினேன். அவரது தாய் மற்றும் சகோதரரின் ஆதரவு பெற்றது தொடர்பாக நாங்கள் விவாதித்தோம் என கூறியுள்ள பிரதமர், இதுகுறித்த புகைப்படத்தையும் டுவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார். மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா மாவட்டத்தை சேர்ந்த அச்சிந்தா ஷூலிக்கு அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது சாதனை எண்ணற்ற நாட்டு மக்களுக்கு ஊக்கமளிக்கும் எனவும் உண்மையிலேயே நாம் அனைவருக்கும் பெருமையான தருணம் இது எனவும் தமது டுவிட்டர் பக்கத்தில் மம்தா தெரிவித்துள்ளார். இதற்கிடையே அச்சிந்தாவின் சொந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். தங்களது கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் காமன்வெல் விளையாட்டில் கலந்துகொண்டது யாருக்கும் தெரியாது. மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் கூட அவரை அறியவில்லை எனவும் எங்களுக்கு அரசு ஆதரவு தேவை எனவும் அச்சிந்தா சகோதரர் அலோக் ஷூலி குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |