தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மாதவன். இவருக்கு இளம் பெண்கள், ஆண்கள் என ஒர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். தற்போது இவர் “ராக்கெட்டரி தி நம்பி எஃபெக்ட்” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார். இந்த திரைப்படம் இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சங்கங்களை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்டது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளார். இந்த படம் ஜூலை 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் பலரின் பாராட்டுகள் பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்தத் திரைப்படம் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 28 நாட்களாக கிட்டத்தட்ட 350 திரையரங்களில் ஓடிக்கொண்டிருப்பதால் ரூ.25 ஆயிரம் கோடி தாண்டி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் இந்த படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதோடு வெளிநாட்டு உரிமம், தொலைக்காட்சி, வியாபாரம் என்று மொத்தமாக மாதவனின் ‘ராக்கெர்ட்ரி தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படம் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.