Categories
தேசிய செய்திகள்

ஒரே நேரத்தில் 3000 பேர் புகைப்படம் எடுக்க ஏற்பாடு…. “வொன்டர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்”கின்னஸ் சாதனை….!!!!!!!!!

ஆந்திர மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை மந்திரி ஆக செயல்பட்டு வருகிறார் ரோஜா. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக மந்திரி ரோஜாவை  ஒரே நேரத்தில் 3000 பேர் போட்டோ எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி ஆந்திரா தெலுங்கானாவை சேர்ந்த 3000 பேர் போட்டோகிராபர்கள் நேற்று விஜயவாடாவில் உள்ள தனியார் மண்டபத்தில் குவிந்துள்ளனர். இதனை அடுத்து அமைச்சர் ரோஜா திருமண மண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறினார்.

அவரை சுற்றிலும் 3000 பேர் போட்டோகிராபர்கள் நிற்கவைக்கப்பட்டு இருந்தனர்.ஒன் கிளிக் ஆன் சேம் டைம் என்னும் அர்த்தத்தில் ஒரே நேரத்தில் 3000 பேர் போட்டோகிராபர்களும் அமைச்சர் ரோஜாவை  போட்டோ எடுத்தனர். உலகத்தில் இதுவரை யாரும் பெண் மந்திரி ஒருவரை ஒரே நேரத்தில் 3000 போட்டோகிராபர்கள் போட்டோ எடுக்கவில்லை. இதனை அடுத்து வொன்டர் புக் ஆப் ரெக்கார்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் மந்திரி  ரோஜாவுக்கு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |