இந்திய மாணவர் சங்கத்தின் மாநாடு கோவை மாவட்ட காந்திபுரம் கமலம் துரை சாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதனால் மாநாடு பிரதிநிதிகள் காஞ்சிபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக மாநாட்டுக்கு அரங்கை நோக்கி செல்ல முயன்றனர். அப்போது அதற்கு அனுமதி இல்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் அவர்கள் தாரை தப்பட்டையுடன் ஊர்வலமாக செல்ல முயன்றனர். இதனையடுத்து போலீசாருக்கும் மாணவ அமைப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அவர்களை போலீசார் எச்சரித்தனர். அதன் பிறகு பேச்சுவார்த்தையை தொடர்ந்து மாணவர்கள் அமைப்பினர் மாநாடு நடக்கும் மண்டபத்தை நோக்கி சென்றனர்.