சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தின் மீது எலான் மஸ்க் வழக்கு தொடர்ந்துள்ளார்.
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் 44 மில்லியன் டாலருக்கு டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக சமீபத்தில் அறிவித்தார். அதன் பிறகு எலான் மஸ்க் டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள் பற்றிய விவரங்களை தர வேண்டும் என டுவிட்டர் நிறுவனத்திடம் கேட்டிருந்தார். ஆனால் டுவிட்டர் நிறுவனம் போலி கணக்குகளை தர மறுத்ததால், எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக அறிவித்தார். இதன் காரணமாக டுவிட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி நடைபெறும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக எலான் மஸ்க்கும் டுவிட்டர் நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன்படி 164 பக்க ஆவணங்கள் மஸ்க் தரப்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.