Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. திருவண்ணாமலையில் கோர விபத்து….!!

கார் மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி கொசப்பாளையம் பகுதியில் ராமு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் லோகநாதன் ஆரணியில் இருந்து வேலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அரியப்பாடி அருகில் சென்று கொண்டிருந்தபோது கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த லோகநாதனை வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு லோகநாதனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஆரணி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |