Categories
தேசிய செய்திகள்

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இந்தியர்…. டீக்கடை நடத்தி வரும் தந்தை நெகிழ்ச்சி….!!!

இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காமில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 17 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் பளு தூக்கும் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சங்கெத் மகாதேவ் சர்க்கார் கலந்து கொண்டார். இவர் 55 கிலோ பளு தூக்கும் போட்டியில், 248 கிலோவை தூக்கி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இவர் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் வென்று கொடுத்ததால், பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோர் சங்கெத்தை பாராட்டியுள்ளனர்.

இது தொடர்பாக சங்கெத்தின் பெற்றோர் மகாதேவ் கூறியதாவது, நான் டீக்கடை மற்றும் பீடா கடை நடத்தி வருகிறேன். என்னுடைய மகன் முதலில் கோலே இந்திய இளையோர் போட்டியில் கலந்து கொண்டு மராட்டிய மாநிலத்திற்காக தங்கப் பதக்கம் வென்று கொடுத்தார். இப்போது காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் சங்கெத்தின் சகோதரி, அவருடைய கைகளில் காயம் இருந்த போதிலும் அதை பொருட்படுத்தாமல் நாட்டுக்காக போராடி வெள்ளி பதக்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |