சலூன் கடைக்காரரை அரிவாளால் வெட்டிய அக்காள் கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செயின்ட் மேரீஸ் காலனியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது அக்கா மகேஸ்வரி என்பவருக்கும் லெவிஞ்சிபுரம் பகுதியில் வசிக்கும் யுவராஜ் என்பவருக்கும் திருமணம் நடந்து 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மகேஸ்வரிக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகேஸ்வரி அவரைவிட்டு பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இதனால் யுவராஜ் தனது குழந்தைகளை பார்க்க மாமனார் வீட்டிற்கு வந்து செல்வார். இந்நிலையில் வழக்கம்போல் குழந்தைகளை பார்க்க வந்தபோது செல்வத்திற்கும் யுவராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு விலகியது. இது தொடர்பாக மீண்டும் அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த யுவராஜ் செல்வத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த செல்வம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தென்பாகம் காவல்துறையினர் யுவராஜை கைது செய்துள்ளனர்.