Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இலவச வீட்டுமனை பட்டா தாங்க…. போராட்டத்தில் இறங்கிய மக்கள்…. பெரும் பரபரப்பு….!!!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகில் சோளிகவுண்டனூர் அருந்ததியர் காலனியில் சென்ற 50 வருடங்களுக்கும் மேலாக 20க்கும் அதிகான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நீர் நிலை புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகள் கணக்கெடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனிடையே அந்த 20 குடும்பத்தினருக்கும் மாற்று இடமாக 1 ஏக்கர் 30 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டதாகவும், அந்த நிலத்தை வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்துவதும், அப்போது விரைவில் இடம் தருவதாக அதிகாரிகள் கூறுவதும் வாடிக்கையாக நடந்துள்ளது. இந்நிலையில் ஓமலூர் தாலுகா அலுவலகத்துக்கு நேற்று மதியம் 20க்கும் அதிகமானவரகள் தங்களது குடும்பத்தினருடன் வந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல தனி தாசில்தார் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழ்நிலையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு சென்ற 20 வருடங்களாக போராடி வருகிறோம்.

எனினும் அதிகாரிகள் எங்களது கோரிக்கையை கண்டுகொள்ளவே இல்லை என வேதனை தெரிவித்தனர். போராட்டம் நடத்தியவர்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது வரும் 2ஆம் தேதி தாசில்தார் நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார். ஆகவே போராட்டத்தை கைவிடும்படி கூறினர். இதனை ஏற்று பொதுமக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இந்த தர்ணா போராட்டத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |