Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு….. மின் உற்பத்தி அதிகரிப்பு….. வெளியான தகவல்….!!!!!

சேலம் மாவட்டம் சேக்கானுர், நெருஞ்சிப்பேட்டை, கோகனேரிப்பட்டி, ஊராட்சிகோட்டை பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே நீர்மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தலா 30 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றனர். மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவை பொறுத்து மின் உற்பத்தியின் அளவும் மாறுபடும். தற்போது மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனல் மேல் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை, மின் அளவுகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கதவணை நீர் நிலையங்களின் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் மழை பொழிவும், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு தொடர்ந்து ஒரே சீராக இருக்கும் பட்சத்தில் நீர்மின் நிலையங்களின் வரக்கூடிய மாதங்களின் மின் உற்பத்தி சீராக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |