Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் இந்த பகுதியில்….. 3 நாட்கள் டாஸ்மாக் இயங்காது…. குடிமகன்கள் ஷாக்….!!!!

நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலையை தலைமையிடமாகக் கொண்ட கடையெழு வள்ளல்களில் ஒருவரான ஓரி மன்னன் ஆட்சி செய்து வந்தார். வில்வித்தையில் சிறந்து விளங்கிய இந்த மன்னனுக்கு வருடம்தோறும் ஆடி மாதம் 17, 18 ஆகிய இரண்டு தினங்கள் விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த வருடம் இந்த விழாவானது ஆகஸ்ட் 2 மற்றும் மூன்றாம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில் கொல்லிமலை இந்த விழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 3ஆம் தேதி வரை மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட அம்மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் உத்தரவிட்டுள்ளார். வாழ்வில் ஓரி விழாவை முன்னிட்டு கொல்லிமலை, செம்மேடு, சோளக்காடு, செங்கரையில் உள்ள டாஸ்மாக் கடைகளை கூட உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |