சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு நீதிபதி 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் மகேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு மகேஷ் குமார் 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மகேஷ் குமாரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி மகேஷ் குமாருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும், 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார்.