Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற ஊழியர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ரயிலில் அடிபட்டு தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடியில் கிறிஸ்டோபர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அம்பத்தூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து கிறிஸ்டோபர் ரயிலில் பட்டாபிராம் வந்து இறங்கியுள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு செல்வதற்காக கிறிஸ்டோபர் தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளார்.

அப்போது சென்னை நோக்கி வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் கிறிஸ்டோபர் மீது மோதியதால் சம்பவ இடத்திலே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |