மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு இலவச உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது.
சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் மூத்த குடிமக்களுக்கும் இலவச உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் வருகின்ற 2-ஆம் தேதி தொடங்கி 18-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இது குறித்து கலெக்டர் வெளியிடுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, அதிகாரம் வழங்கல் அமைச்சகம், மத்திய அரசின் சமூக நீதி மூலம் இம்மாவட்டத்தில் வசிக்கும் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் செயற்கை பல்செட், ஊன்றுகோள்கள், பார்வையற்றவர்களுக்கான கண்ணாடிகள், செவியற்றவர்களுக்கான காணொளி கருவிகள், செயற்கை அவயங்கள், மூடநீக்கு கருவிகள் போன்ற உபகரணங்களை இலவசமாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் இதற்கான சிறப்பு முகாம் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெற இருக்கிறது.
இவை வருகின்ற 2-ஆம் தேதி திருப்பத்தூரிலும், 3-ஆம் தேதி காளையார்கோவிலிலும், 4-ஆம் தேதி மானாமதுரையிலும், 5-ஆம் தேதி திருப்புவனத்திலும், 6-ஆம் தேதி இளையான்குடியிலும், 1௦-ஆம் தேதி தேவகோட்டையிலும், 11-ஆம் தேதி கன்னங்குடியிலும், 12-ஆம் தேதி சாக்கோட்டையிலும் நடைபெற இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து 13-ஆம் தேதி கல்லலிலும், 16-ஆம் தேதி எஸ். பூதூரிலும், 17-ஆம் தேதி சிங்கம்பூணரிலும், 18-ஆம் தேதி சிவகங்கையிலும் முகாம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாம் ஒவ்வொரு வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் காலை 10 மணி அளவில் நடைபெற இருக்கிறது.
இதில் பங்கேற்க வரும் நபர்கள் ஆதார் அட்டை, மாவட்ட நிலை அலுவலர்கள் வழங்கிய வருமானச் சான்று அல்லது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர் என்பதற்கான ரேஷன் கார்டு அல்லது மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்ட அடையாள அட்டை, இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டை, தேசிய சமூக நல உதவி திட்ட அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் முகம் நடைபெறும் நாட்களில் கலந்து கொண்டு பயனடையலாம் என கூறியுள்ளார்.