Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆகஸ்ட் 1 ம் தேதி முதல்…. மோட்டார் சைக்கிளில் செல்வதற்கு ஹெல்மெட் கட்டாயம்…. மாநகர போலீசார் அதிரடி அறிவிப்பு…!!!!!!!!

சேலம் மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து  வருகின்றனர். அதிலும் குறிப்பாக மோட்டார் சைக்கிள் மற்றும் மொபெட்டில்  ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கை செய்து அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றார்கள். ஆனால் மாநகரில் ஹெல்மெட் அணியாமல் ஏராளமான வாகன ஓட்டிகள் செல்வதை பார்க்க முடிகிறது. இந்த சூழலில் சேலம் மாநகரில் வருகின்ற 1ஆம் தேதி முதல் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற நடைமுறை அமலுக்கு வருகின்றது.

இது பற்றி மாநகர போலீசார் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, வருகின்ற ஒன்றாம் தேதி முதல் சேலம் மாநகரத்தில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. மேலும் மோட்டார் சைக்கிள் போன்ற இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாகன ஓட்டிகள் விபத்துகளை தடுக்க மாநகர போலீசருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |