Categories
தேசிய செய்திகள்

கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி…. உண்மை அறியாமல் கணவன் செய்த செயல்….!!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வசித்து வந்தவர் சாய்பிரியா (24). இதில் சாய்பிரியாவுக்கும் அவருடைய உறவினரான சீனிவாஸ் என்பவருக்கும் ஓராண்டுக்கு முன்பு  திருமணம் நடந்தது. சீனிவாஸ் ஐதராபாத்திலுள்ள ஒரு தனியார் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பு நான் கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்க வேண்டும் என கணவனிடம் கூறிய சாய்பிரியா, விசாகப்பட்டினத்திற்கு வந்தார். அதன்பின் சீனிவாஸ் விசாகப்பட்டினம் வந்தடைந்தார். கடந்த திங்கள்கிழமையன்று 2 பேரும் விசாகப்பட்டினத்திலுள்ள கடற்கரைக்கு மாலை வேளையில் சென்றிருந்தனர். அப்போது சீனிவாசுக்கு அவரது நண்பரிடமிருந்து செல்போனில் அழைப்புவந்தது.

நண்பருடன் செல்போனில் பேசிய பிறகு தேடி பார்த்தபோது சாய்பிரியாவை காணவில்லை. இதனால் சாய்பிரியா கடலில் விழுந்து இருக்கலாம் என்று சீனிவாஸ் கருதினார். பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் சாய்பிரியாவை காணவில்லை. இது தொடர்பாக சீனிவாஸ் அளித்த புகாரின்படி வழக்குபதிவு செய்த விசாகப்பட்டினம் காவல்துறையினர் கடலோர காவல்படையினருக்கு தகவலளித்து சுமார் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்து சாய்பிரியாவை ஹெலிகாப்டர் வாயிலாகவும் வேறு வகைகளிலும் 2 நாட்களாக தேடி வந்தனர். இந்நிலையில் சாய் பிரியா பெங்களூரில் பாதுகாப்பாக உள்ளதாகவும், தன்னை தேட வேண்டாம் என்றும் பெற்றோருக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.

அதாவது தன் காதலன் ரவியுடன் தனது விருப்பத்தின்படி வெளியேறியதாகச் கூறியுள்ளார். மேலும் காதலனை திருமணம் செய்து கொண்டதாகவும் அவருடனேயே இருக்க முடிவுசெய்து இருப்பதாகவும் கூறி இருக்கிறார். அத்துடன் கழுத்தில் தாலியுடன் உள்ள படத்தை அவர் தந்தைக்கு அனுப்பி வைத்திருக்கிறார். சாய்பிரியா திருமணத்துக்கு முன்னரே நெல்லூரை சேர்ந்த ரவி என்பவரை காதலித்து வந்ததும், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் கணவனுடன் வாழ பிடிக்காமல் திட்டம்போட்டு ஐதராபாத்திலிருந்து விசாகப்பட்டினம் வந்து அங்கிருந்து கணவனை ஏமாற்றி ரவியுடன் சேர்ந்து சாய்பிரியா நெல்லூருக்கு வந்ததும் தெரியவந்துள்ளது.

Categories

Tech |