Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் கலைக்குழுவில் 4 பேருக்கு கொரோனா….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல்முறையாக இந்தியாவில், அதிலும் தமிழகத்தில் இன்று நடைபெறவுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று தொடங்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி. முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்கவுள்ளனர். இதற்காக சென்னையிலிருந்து மாமல்லபுரம் வரையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் சென்னை முழவதும் திருவிழாபோல் ஜொலிக்கிறது.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா கலைநிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் சற்றுநேரத்தில் பிரதமர் மோடி நேரு உள்விளையாட்டரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க உள்ள நிலையில், 4 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. விழாவில் பங்கேற்கும் கலை குழுவினர் உட்பட 900 பேருக்கு பரிசோதனை செய்ததில் கலைக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |