Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பம் ஆரம்பம்”….. வெளியான செய்தி குறிப்பு….!!!!!

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பம் விநியோகிக்கப்படுவதாக மண்டல இணைப்பதிவாளர் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார்.

2022-23ம் வருடத்திற்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு பயிற்சியாளர்கள் சேர்க்கையானது தற்பொழுது நடந்து வருகின்றது. மேலும் பயிற்சி விண்ணப்பங்களும் வழங்கப்பட்டு வருகின்றது. விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலைய அலுவலகத்தில் ரூபாய் 100 ரொக்கமாக செலுத்தி நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி ஐந்து முப்பது மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கூரியர் மற்றும் பதிவு தபால் மூலமாக விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள், பட்டப்படிப்பு, பட்ட மேற்படித்த ஆண்-பெண் இருப்பாலரும் இந்த பயிற்சியில் சேரலாம். ஒரு வருட பயிற்சி காலத்திற்கு ரூபாய் 18,850 கட்டணம் செலுத்த வேண்டும் என கூட்டுறவு சங்கங்களில் மண்டல இணைப்பதிவாளர் யசோதா தேவி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

Categories

Tech |