நடைபெற்ற செஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் தேவி பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பள்ளியில் செஸ் விளையாட்டு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் மாணவர்கள் பள்ளி மைதானத்தில் சதுரங்க வடிவில் வரையப்பட்ட தளத்தில் சதுரங்க காய்களாக பங்கேற்று விளையாடினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.