Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கல்லூரிகளில்…. இன்றே (ஜூலை 27) கடைசி நாள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வியில் சேர விண்ணப்பித்து வருகின்றனர். அதன்படி கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவு நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர இதுவரை 2 லட்சத்து ஐந்தாயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதனைப் போலவே 163 கலை அறிவியல் கல்லூரிகளில் 4 லட்சத்து 1494 பேர் நேற்று முன்தினம் வரை விண்ணப்பித்துள்ளனர்.

சிபிஎஸ்இ மாணவர்கள் கடந்த நான்கு நாட்களாக இன்ஜினியரிங் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து வரும் நிலையில் இன்று மாலையுடன் கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவடைகிறது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிகளவில் மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

Categories

Tech |