Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களே…..! நாளை தான் கடைசி நாள்….. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..

மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த +2 மாணவர்கள் உயர் கல்வியில் சேர விண்ணப்பித்து வருகின்றனர். கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதே போல 163 கலை அறிவியல் கல்லூரிகளில் 4 லட்சத்து 1, 494 பேர் நேற்று வரை விண்ணப்பித்துள்ளனர்.

சி.பி.எஸ்.இ. மாணவர்கள் கடந்த 4 நாட்களாக என்ஜினீயரிங் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து வந்த நிலையில் நாளை மாலையுடன் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் அவகாசம் முடிகிறது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிகளவில் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர்.

Categories

Tech |