நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் சட்டவிரத பனைவர்த்தனை தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறை முன்பாக இன்று 2 வது நாளாக ஆஜராகி உள்ளார். மேலும் அமலாக்க துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி டெல்லியில் சோனியா காந்தி மீதான அமலாக துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையிலிருந்து விஜய் சவுக் கரை ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
அப்போது விஜய் சவுக்கில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று குடியரசு தலைவர் திரௌபதி மும்மூரியிடம் மனு கொடுக்க சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் சவுக்கு பகுதியில் ராகுல் காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து போலீசாருக்கும் எம்.பி.களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர் .