இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒரு சில அரசியல் பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 4 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததாகவும் தற்போது அவர் மருத்துவமனையில் மேற்கொண்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பின் அவர் குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
Categories
FLASH NEWS: பீகார் முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி…..!!!!
