Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பெண் இன்ஜினியரிடம் 9 பவுன் நகை கொள்ளை…. 3 பெண் கைவரிசை…. ரயில்வே போலீசார் அதிரடி….!!!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி வள்ளி வினோதினி(25) என்ஜினியர் ஆவார். இவர் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி மதுரையிலிருந்து பெங்களூருக்கு செல்ல நாகர்கோவில்-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார். சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு மறுநாள் அதிகாலை ரயில் வந்தது. அதன் பிறகு தர்மபுரி நோக்கி ரயிலில் சென்ற போது வள்ளி வினோதினி தனது பையில் வைத்திருந்த நகையை பார்த்த போது 9 பவுன் நகை காணவில்லை. சேலம்-தருமபுரி இடைப்பட்ட பகுதியில் ரயில் சென்ற போது மர்ம நபர்கள் அவரது நகையை திருடி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து தர்மபுரி ரயில்வே போலீசில் வள்ளி வினோதினி புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டியில் ஈடுபட்ட நபர்களை குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதில் சேலம் தர்மபுரி ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் திருட்டுப் போன நேரத்தில் பயன்பாட்டில் இருந்த செல்போன் எண்களை சேகரித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ஆந்திர மாநில குப்பம் பகுதியை சேர்ந்த 3 பெண்கள் நகை திருட்டில் ஈடுபட்டதும் அவர்கள் புதுக்கோட்டையில் குடும்பத்துடன் தங்கி இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அங்கு சென்று ரயில்வே போலீசார் திருட்டில் ஈடுபட்ட ஆண்டி என்பவரின் மனைவி வெண்ணிலா(40), ரஞ்சித் மனைவி சத்யா(23), விக்னேஷ் மனைவி கவிதா(25) ஆகிய மூன்று நபர்களையும் கைது செய்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில், மதுரையில் இருந்தே வள்ளி வினோதினி பின் தொடர்ந்து வந்து, அவர் படுக்கையில் தூங்கி கொண்டிருந்த போது நகையை திருடி சென்றதாக தெரிவித்தனர். அதன் பிறகு அவர்களிடம் இருந்து 9 பவுன் நகை மீட்கப்பட்டது.

Categories

Tech |