மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருமாந்துறை காமராஜ் நகரில் சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலா (23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஹோட்டலில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாலா சின்னாறு பகுதியில் இருக்கும் ஒரு ஹோட்டலின் பின்புறம் வயரிங் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக உயர்மின் அழுத்த கம்பி பாலாவின் தலையில் உரசியது.
இதனால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று பாலாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.