Categories
உலக செய்திகள்

இலங்கைக்குரிய நிதியுதவியை நிறுத்துங்கள்… ஜப்பானிடம் முன்பே கூறிய ரணில் விக்ரமசிங்கே… வெளியான தகவல்…!!!

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தங்கள் நாட்டிற்கு அளிக்கும் நிதி உதவியை நிறுத்துமாறு 2007-ஆம் வருடத்தில் ஜப்பானிடம் கூறியதாக விக்கி லீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கை நாட்டிற்கான நிதி உதவியை நிறுத்துங்கள் என்று ஜப்பான் நாட்டிடம் தற்போதைய அதிபர் அணில் விக்ரமசிங்கே கடந்த 2007 ஆம் வருடத்தில் கூறியதாக விக்கி லீக்ஸ் தெரிவித்திருக்கிறது. விக்கிலீக்ஸ், இலங்கையின் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு, ஜப்பான் அரசிற்கும் நடந்த உரையாடல் குறித்த ஆவணம் ஒன்றை வெளியிடப்பட்டிருக்கிறது.

அதில் கடந்த 2007 ஆம் வருடம் ரணில் விக்ரமசிங்கே எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். அப்போது, தங்கள் நாட்டிற்கு அளிக்கும் நிதி உதவியை நிறுத்துமாறு சீனாவிடம் தெரிவித்தார். இலங்கையின் தலைவர்கள் கமிஷன் வாங்குவது, மக்களை புறக்கணிப்பது போன்றவற்றால் மக்களை தண்டிக்கக்கூடாது. எனவே உதவி அளிப்பதை நிறுத்த முடியாது என்று ஜப்பான் பதில் தெரிவித்ததாக விக்கி லீக்ஸ் கூறியிருக்கிறது.

Categories

Tech |