Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு…. ரயில்வே அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தனியார் நிறுவனங்களால் பயணிகள் ரயில்களை இயக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய ரயில்வே தனது நெட்வொர்க்கில் பல கட்டங்களாக தனியா ரயில்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருந்தது. அடுத்த நிதியாண்டு முதலில் 12 பெட்டிகளை இயக்கத் தொடங்கும் என்றும் 2027 ஆம் ஆண்டுக்குள் 151 பெட்டிகளை தனியார் ஆப்ரேட்டர்களால் இயக்கப்படும் எனவும் தெரிவித்தது.

இந்நிலையில் ரயில்வே துறையிடம் தற்போது தனியார் மயமாக்கல் குறித்த எந்த ஒரு திட்டமும் இல்லை என்று ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். இருந்தாலும் ஐ ஆர் சி டி சி மற்றும் megha engineering and infrastructure ஆகிய இரண்டு ஏலத்தாரர்கள் மட்டுமே நிதி ஆர்வத்தை வெளிப்படுத்தினர். சமீப காலமாக இந்திய ரயில்வே தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என்று தகவல் பரவி வந்த நிலையில் இந்த செய்தி பொதுமக்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது அரசு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது

Categories

Tech |