Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி….. “இனி வீட்டிலிருந்தே நாம் பார்க்கலாம்”…. அரசு சூப்பர் ஏற்பாடு….!!!!

இணையதளங்கள் வாயிலாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக பூஞ்சேரியில் உள்ள போர் பாயிண்ட்ஸ் அரங்கத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 188 நாடுகளைச் சேர்ந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட 2500 க்கும் மேற்பட்டோர் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. போட்டியில் பங்கேற்க வருபவர்களுக்கு வரவேற்பு, விருந்தோம்பல், கலை நிகழ்ச்சி,  தங்கும் இடம், உணவு உபசரித்தல் உள்ளிட்ட அனைத்தையும் கவனிக்க தமிழக அரசு சார்பாக 18 குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

ஒரே அரங்கில் 196 செஸ் போர்டுகளும், மற்றொரு அரங்கில் 512 செஸ் போர்டுகளும் மேஜையில் வைக்கப்பட்டுள்ளன. செஸ்ட் ஒலிம்பியாட் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை மக்கள் வீட்டிலிருந்தே கண்டுகளிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஒலிம்பியாட் தொழில்நுட்ப பணிகள் கண்காணிப்பாளர் ஆனந்த் பாபு தெரிவித்துள்ளார். மேலும் chess Olympiad, live chess, http://chess24.com ஆகிய இணையதளங்கள் வாயிலாக போட்டிகளை காணலாம் மேலும் செஸ் ஒலிம்பியாட் மொபைல் ஆப்’ வாயிலாகவும் போட்டியை காண ஏற்பாடு செய்யப்பட்டள்ளது.

Categories

Tech |