தேவையான பொருள்கள்:
சோளம் – ஒரு கப்
உளுந்து – கால் கப்
வெந்தயம் – சிறிதளவு
சின்ன வெங்காயம் – ஒரு கையளவு
பச்சை மிளகாய் – காரத்துக்கேற்ப
கல் உப்பு – ருசிக்கேற்ப
செய்முறை:
சோளம் ,உளுந்து, வெந்தயம், மூன்றையும் நான்கு மணி நேரம் ஊறவைத்து இட்லிக்கு அரைப்பது போல் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள் .இதில் உப்பு சேர்த்து கரைத்து ஏழு மணி நேரம் புளிக்க வையுங்கள். பிறகு வெங்காயம், மிளகாய் சேர்த்து பணியாரம் சுட்டால் அது காரப் பணியாரம். மாறாக இந்த மாவை அரைத்து தேவைக்கு ஏற்ப பனைவெல்லம் கரைத்து ஏலக்காய் துளை போட்டு கலந்து பணியாரம் சுட்டால் அது இனிப்புப் பணியாரம். இப்போது சோள பணியாரம் ரெடி.