டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கக்கூடிய இடங்களை நிரப்புவதற்கு நாளை குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு கல்வி தகுதி நிலையில் காலியாக இருக்கக்கூடிய 7,301 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் 9,35,344 பேரும், பெண்கள் 12, 67,457 பேர் என மொத்தம் 22 லட்சம் பேர் இந்த தேர்வில் பங்கேற்க உள்ளன.
காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை இந்த தேர்வு நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 316 தாலுகா பகுதிகளில் 7,689 மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. சென்னையில் மட்டும் 503 இடங்களில் தேர்வு நடைபெறுகின்றது. சென்னையிலிருந்து ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர். எனவே தேர்வு மையங்களின் எண்ணிகைக்கு ஏற்ப சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.