Categories
தேசிய செய்திகள்

இந்த மாநிலத்தில் எச்ஐ.வி தொற்று அதிகரிப்பு….. வெளியான அதிர்ச்சி தகவல் ….!!!!

திரிபுரா மாநிலத்தின் அகர்தலா பகுதியில் எச்.ஐ.வி தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாக திரிபுரா எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் இயக்குநர் டெபர்மா கூறுகையில், “ஊசி மருந்துகளின் பயன்பாட்டால் எச்.ஐ.வி பாசிட்டிவ் நிலைமை அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களில் அகர்தலா நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

இந்த பகுதிகளில் சுமார் 300 எச்.ஐ.வி நோயாளிகள் இருக்கின்றனர். கடந்த மூன்று மாதங்களில் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அகர்தலா முனிசிபலின் 59 வார்டுகளில், 50 சதவீதத்திற்கும் அதிகமான வார்டுகளில் மக்கள் ஊசி மருந்துகளை பயன்படுத்துகின்றனர். இதில் பெரும்பாலானோர் 16 – 24 வயதுக்குட்பட்டவர்கள்” என தெரிவித்தார்.

Categories

Tech |