Categories
மாநில செய்திகள்

“இடைக்கால பொதுச்செயலாளர்” இ.பி.எஸ் மீது தொடரப்பட்ட வழக்கு…. ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவு….!!!

அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கியதோடு. அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார். இதனையடுத்து ஓபிஎஸ் வகித்த பொருளாளர் பதவியை திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கியதோடு, சட்டமன்ற துணை தலைவர் பதவியை ஆர்பி உதயகுமாருக்கு வழங்கினார் இபிஎஸ். இதன் காரணமாக திண்டுக்கலை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் எனவும், நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான வழக்கு நீதிபதி எஸ். பிரியா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக கட்சியின் நிர்வாகிகள் ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்குள் உரிய முறையில் பதில் அளிக்க வேண்டும் என கூறி வழக்கை ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Categories

Tech |