Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுடன் அமர்ந்த அமைச்சர்…. திடீர் என்ட்ரி… திகைத்துப் போன ஆசிரியர்கள்….!!!!!!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ச்சியில் முன்னுரிமை பெறும் மாவட்டங்களில் சிறப்பு சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்டம் நடைபெற்றுள்ளது. இந்த திட்டமானது கீழக்கரை தனியார் கல்லூரியில் வைத்து நடைபெற இருந்தது. இந்த திட்டத்தினை தொடங்கி வைப்பதற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் ராமநாதபுரம் ஆர் எஸ் மடையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்குள் வருகை கொடுத்தார்.

அவர் அங்குள்ள பள்ளியில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருகிறார்களா  எனவும் பள்ளியில் உள்ள கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு கற்றுக் கொடுக்கும் ஸ்மார்ட் வகுப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அது மட்டுமல்லாமல் வரும் மாணவர்களின் அமர்ந்து ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனிக்கவும் செய்தார். அவர் பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்து தொடர்ந்து கீழக்கரை தனியார் கல்லூரிக்கு கிளம்பினார். திடீரென பள்ளி கல்வித்துறை அமைச்சர் பொயாமொழி அரசு பள்ளிக்குள் நுழைந்து ஆய்வு மேற்கொண்டது அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |