தேனிலவு சென்ற இடத்தில் மனைவியை அடித்து கொலை செய்து விட்டு படகுமூலம் தீவுக்கு தப்பி ஓடிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தெற்கு பசுபிக் கடலில் நூற்றுக்கணக்கான தீவுகள் உள்ள நாடு பிஜி. இந்த நாட்டில் தீவுகள் சுற்றுலா தளங்களாக உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தை சேர்ந்த கிரிஸ்டி ஜியோன் சென் கடந்த பிப்ரவரி மாதம் பிரட்லி ராபர்ட் டாசன் என்ற நபரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு தேனிலவு செல்வதற்கு கடந்த ஏழாம் தேதி பிஜி நாட்டில் உள்ள தீவுக்கு வந்துள்ளனர். இந்த தம்பதியினர் அந்த தீவில் ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளன.
ஓட்டலில் வைத்து கணவன் மனைவி இருவருக்கும் இடையில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தனது மனைவி கிறிஸ்டியனாவை கழிவறையில் வைத்து அடித்து கொலை செய்தார் பிரட்லி . அதன் பின்னர் உடலை அங்கேயே போட்டுவிட்டு அந்த தீவில் இருந்து துடுப்பு படகு மூலமாக வேறொரு தீவுக்கு தப்பி சென்றுள்ளார். ஹோட்டலில் அவர்கள் தங்கி இருந்த அறை ஒரு நாள் முழுவதும் மூடப்பட்டிருந்தது. மறுநாள் காலையும் அறை மூடப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்த பணியாளர்கள் கதவைத் திறந்து உள்ளே பார்த்தபோது கிறிஸ்டியனா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இதன் பிறகு காவல்துறைக்கு தகவல் அனுப்பப்பட்டது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் உடலை கைப்பற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது கணவரை தேடிய போது அவர் அருகில் உள்ள தீவில் சுற்றி தருவதாக தகவல் வந்தது. அங்கு சென்று அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.