Categories
உலக செய்திகள்

அச்சுறுத்தும் கொரோனா…. ஒமைக்ரானின் 7-வது அலை பரவுதா….? பிரபல நாட்டில் பரபரப்பு….!!

தலைநகர் டோக்கியோவில் ஒரே நாளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஜப்பான் நாட்டில் ஒரே நாளில் 1 லட்சத்து 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா  நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அந்நாட்டில்  உள்ள மக்கள் தற்போது கொரோனாவின் 7-வது அலையை சந்தித்து வருகின்றனர். அங்கு வேகமாக பரவும் பி.ஏ 5 ஒமைக்ரான் வகை கொரோன நோய் தொற்று தொடந்து அதிகரித்து கொண்டே வருகின்றது.

தலைநகர் டோக்கியோவில் ஒரே நாளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்திற்கு பிறகு டோக்கியோவில் பதிவான அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு இதுவாகும். ஒசாகா மற்றும் ஃபுகுயோகா மாகாணங்களும் அதிக எண்ணிக்கையிலான புதிய கொரோனா நோய்  தொற்று பாதிப்பை பதிவு செய்துள்ளது. இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த முடிந்த வரை அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சுகாதார மந்திரி ஷிகேயுகி கோட்டோ கூறியதாவது, “இந்த நேரத்தில் எந்த கடுமையான கட்டுப்பாடுகளும் தேவையில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |