Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தேர்தல் தொடர்பான முன்விரோதம்…. கூலி தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. குமரியில் பரபரப்பு…!!

கூலி தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இடைக்கோடு குடுக்கச்சி விளை மலமாரி பகுதியில் தி.மு.க பிரமுகரான தாஸ்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சாந்தா என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் தாசுக்கும் அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க பிரமுகரான ஸ்டான்லி என்பவருக்கும் உள்ளாட்சி தேர்தலின் போது முன்விரோதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் ஸ்டான்லி தாசை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அப்போது இருவரும் மது போதையில் இருந்ததால் அது கைகலப்பாக மாறியது.

பின்னர் ஸ்டான்லி தாசை பிடித்து கீழே தள்ளியதால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தாசை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு தாசை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஸ்டான்லியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |