ரயிலில் அடிபட்டு தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விநாயகர் நகரில் கூலி தொழிலாளியான நாச்சான்(72) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொட்டிசெட்டிபட்டி ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது மதுரையை நோக்கி சென்ற ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.