Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய வேன்…. கோர விபத்தில் 2 பேர் படுகாயம்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

லாரி மீது வேன் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அவ்வழியாக வேகமாக வந்த வேன் லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் வேனின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இதனை அடுத்து படுகாயமடைந்த வேன் ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தினர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |