Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்…. மகனை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் விவசாயியான கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணகுமார் சரியாக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கிருஷ்ணகுமாரை அவரது தாயார் செல்லம்மாள் கண்டித்துள்ளார்.

இந்நிலையில் மன உளைச்சலில் இருந்து கிருஷ்ணகுமார் வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மாணவரை மீட்டு அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கிருஷ்ணகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |