Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆட்சிகள் மாறினாலும்…. “இது போன்ற காட்சிகள் மாறவில்லை”….. மிகுந்த கவலையில் விவசாயிகள்….!!!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் விவசாயத்தை மட்டுமே முதன்மை தொழிலாக கொண்டுள்ளது. ஒட்டுமொத்த காவிரி டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியாக விளங்கும் சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணைக்கு ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டாலும், கடந்த பல வருடமாகவே கடைப்படை பகுதி வரை முழுமையாக தண்ணீர் சென்றடையவில்லை என்று விவசாயிகள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். இந்த ஆண்டும் மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டும் தண்ணீர் வந்து சேராத விவசாயிகளை மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பருவம் தவறாத வாழ்வாதாரத் தொழிலான விவசாயத்தை விட்டு விடக்கூடாது என்று குறிக்கோளோடு தொடர்ந்து சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தேவையான நேரத்தில் ஆறு மற்றும் வாய்க்கால்களில் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காததால், மோட்டார் பம்பு செட் மூலம் கிடைத்த தண்ணீரை கொண்டு பாயிர்களை காப்பாற்ற நினைத்த விவசாயிகளும் பவர் கட் தலையில் இடி விழுந்தது போல் உள்ளது. அடிக்கடி ஏற்படும் மின்தடையால் அந்த பாம்பு செட் தண்ணீர் எப்போது கிடைக்கும் என்று தெரியாமல் தவித்து போய் இருகின்றனர்.

இதற்கிடையில் உரத்தட்டுப்பாடு, விவசாயி கூலி, தொழிலாளர்கள் தட்டுப்பாடு என்ன விவசாயிகளுக்கு அடுத்தடுத்த சோதனைகள் தொடர்ந்து வண்ண உள்ளது. இந்நிலையில் சீர்காழி கடமடை பகுதிகளில் உள்ள ராஜன் வாய்க்கால், கழுமலை ஆறு, பொறைவாய்க்கால் போன்ற ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தண்ணீர் வந்து சேராத நிலையில் அருகில் உள்ள கொள்ளிடத்தில் லட்சக்கணக்கான அடிக்கு மேல் உபரி தண்ணீர் இரண்டு கறைகளும் தொட்டுக்கொண்டு யாருக்குமே பயன்படாமல் கடலுக்கு சென்று வீணாக கலப்பதை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதனையடுத்து ஆறு, வாய்க்கால்கள் வறண்டு கிடைக்கிறது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து போகுது. தமிழகத்தில் ஆட்சிகள் மாறினாலும், இதுபோன்ற காட்சிகள் மட்டும் மாறவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை என்ற ஒரு துறை ஒன்றி இருக்கிறதா? என்று தெரியவில்லை என விவசாயிகள் தவித்து வருகின்றனர். தமிழக அரசு போதிய தண்ணீரை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |