Categories
உலக செய்திகள்

BREAKING : மீண்டும் வெடித்தது போராட்டம்….. பெரும் பதற்றம்…..!!!!!

இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வான நிலையில், அவருக்கு எதிராக மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.

இலங்கையில் போராட்டக்காரர்களின் ஆவேசத்தை தொடர்ந்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ஷை சிங்கப்பூருக்கு தப்பி சென்று விட்டார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தற்காலிகமாக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இடைத்தொடர்ந்து புதிய அதிபர் தேர்தல் இன்று நடைபெற்றது.

இதில் ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்கேவும், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியை சேர்ந்த டல்லஸ் அழகப்பெருமாவும், ஜனதா விமுக்தி பெரமுனா சார்பில் அனுரா குமார திஸ்சநாயகேவும் போட்டியிட்டனர். எதிர்க்கட்சி தலைவரும், சமாகி ஜெய பலவேகயா கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசாவும் போட்டியில் இருந்தார். இந்நிலையில், அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக சஜித் பிரேமதாசா நேற்று திடீரென அறிவித்தார். ஆளுங்கட்சி வேட்பாளர் டல்லஸ் அழகப்பெருமா வெற்றி பெற தனது கட்சியும், கூட்டணி கட்சிகளும் கடுமையாக பாடுபடும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. இதனைத்தொடர்ந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. இந்நிலையில் இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே 134 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட டல்லஸ் அழகப்பெருமா 82 வாக்குகளும், அனுரா குமார திஸ்சநாயகே 3 வாக்குகளும் பெற்றனர்.

இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வான நிலையில், அவருக்கு எதிராக மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. கொழும்புவில் உள்ள இலங்கை அதிபர் அலுவலகம் அருகே போராட்டக்காரர்கள் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. போராட்டக்காரர்களை ஒடுக்க மீண்டும் திரண்டுள்ளனர். இதனால், ராணுவம் வரவழைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |