அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிரான வழக்குகளில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவு பிறப்பிக்கிறார். இபிஎஸ், ஓபிஎஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு அன்று நடந்த மோதலை அடுத்து அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
சென்னை ராயப்பேட்டையில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சி தலைமை அலுவலகத்தின் முன் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டதால் கட்சி அலுவலகத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்தார்.