மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்மடுகு கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் குடியாத்தம் பகுதிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது காக்கா தோப்பு கிராமம் அருகில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ரவி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் ரவி மோட்டார் சைக்கிளில் மோதிய செம்பேடு கிராமத்தில் வசிக்கும் லோகேஷ் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த குடியாத்தம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.