இந்தியாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்புகள் வெளிவந்த சூழ்நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் 2-வதாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியாகியுள்ளது தமிழகத்தில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளா கன்னூர் மாவட்டத்தில் ஒரு நபருக்கு இத்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர் துபாயிலிருந்து திரும்பியதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார். கோவை விமானம் நிலையத்தில் குரங்கு அம்மை தொடர்பாக மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, குரங்கு அம்மை தாக்கமுள்ள 63 வெளிநாடுகளில் இருந்து தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமானங்களுக்கு வருபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். குரங்கு அம்மை தடுப்புபணிகள் பற்றி கோவை விமானம் நிலையத்தில் ஆய்வு செய்யப்பட்டது. வெளிநாட்டிலிருந்து கோவைக்கு தினமும் 2 விமானங்கள வருகிறது.
அவற்றில் தினசரி 170 பயணிகள் வரை வருகின்றனர். விமானம் நிலையத்தில் ஆர்.டி.பி.சி.ஆர் மையம் ஒன்றும், படுக்கை அறையும் தயாராக உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். கோவை, மதுரை, திருச்சி, சென்னை அரசு மருத்துவமனைகளில் பிரத்யோகமாக 10 படுக்கைகளுடன்கூடிய குரங்கு அம்மை வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கோவை அரசு மருத்துவமனையில் நாளை முதல் குரங்கு அம்மை வார்டு செயல்பட தொடங்கும். அத்துடன் ஐசிஎம்ஆர் வாயிலாக குரங்கு அம்மை தொற்றைக் கண்டறிய நடவடிக்கைகள் மேற்கொண்டுவரும் மத்திய அரசு, 15 ஆய்வகங்களை நிறுவ உள்ளதாகவும், இவற்றில் ஒன்று தமிழகத்தில் அமைக்கவேண்டும் என கேட்டுள்ளதாகவும் அந்த ஆய்வகம் கிங் இன்ஸ்டியுட்டில் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
கேரளா- தமிழகம் இடையேயான நெடுஞ்சாலைகளில் 13 இடங்களில் குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்கும் பணியில் பொது சுகாதாதத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையில் குரங்கு அம்மை பாதிப்புகளை ஆட்சியர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், முகம், முழங்கை பகுதிகளில் கொப்புளம் இருந்தால் அவர்களை தீவிரமாக கண்காணிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இப்போது மீண்டுமாக கொரொனா பாதிப்பு தொடங்கி இருக்கும் சூழ்நிலையில், முகக்கவசம், சானிட்டைசர் பயன்பாட்டை அதிகரிக்க அறிவுறுத்தபட்டுள்ளது. இதற்கிடையில் முதல் தவணை தடுப்பூசி 96 சதவீதமும், 2வது தவணை 86 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளதாகவும், பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
அதிலும் குறிப்பாக வருகிற ஞாயிற்றுகிழமை 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும். ஆயுஷ்மான் பாரத் பணிகளில் தொய்வு என்ற மத்திய நிதி் இணை அமைச்சரின் குற்றச்சாட்டில் தெளிவில்லை. இதுபற்றி எதில் சரிசெய்ய வேண்டும் என சுட்டிக்காட்டினால் அதனை சரிசெய்ய தயார் எனவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார். துறைசார்ந்தவர்கள் ஆயுஷ்மான் பாரத் விஷயத்தில் தமிழகத்தை பாராட்டி உள்ள நிலையில் மத்திய நிதி் இணையமைச்சர், தெரியாமல் கூறிஇருப்பார் எனவும் தெரிவித்தார். மக்களின் வீடுகளுக்கே தேடிசென்று மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கடை கோடி மனிதனுக்கும் தமிழகத்தில் சிகிச்சைகள் கிடைப்பதாகவும் அமைச்சர் கூறினார்.